Sunday 19th of May 2024 10:18:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி மனுத் தாக்கல்! நவம்பர்-5ம் திகதி முன்னிலையாகுமாறு அறிவித்தல்!

விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி மனுத் தாக்கல்! நவம்பர்-5ம் திகதி முன்னிலையாகுமாறு அறிவித்தல்!


நடைபெற்று முடிந்த நாடாமன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் பதிவான வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி மேன்முறையிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லக்கல மற்றும் தம்புள்ளை தேர்தல் தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் சந்தர்ப்பத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து விருப்பு வாக்குகளும் மீண்டும் எண்ணப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE